search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டணம் உயர்வு"

    • பொறியியல் படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் எனவும்,
    • நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 85 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளன.

    பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்த நிலையில் மாணவ-மாணவிகள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக மும்முரம் காட்டும் நிலையில் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் 25 சதவீதம் வரை கட்டண உயர்வு கேட்டு கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பத்திள்ளனர். செலவினங்கள் அதிகரித்துள்ளதால் கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.

    இதனால் வரும் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளன. இந்த கட்டண உயர்வு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    துணை மருத்துவப் படிப்புகள் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்கான கட்டணங்களும் மாற்றப்பட உள்ளன. மாற்றப்படும் புதிய கட்டண அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    பொறியியல் படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் எனவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 85 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளன. 

    • சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வர உள்ளது.

    செங்கல்பட்டு:

    சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளிட்டுள்ளது. கட்டண உயர்வு வரும் ஏப்.1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

    ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.60 முதல் ரூ.190 வரை உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
    • கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

    மணகெதி, கல்லக்குடி, வல்லம், இனம்கரியாந்தல், தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    ஒரு முறை பயணம் செய்வது, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது 225 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் ரூ. 2,050 கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50 சதவீதம் அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது 225 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 50 சதவீதம் அதிகமாகும்.

    ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் ரூ. 2,050 கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்வதற்கு 600 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் கேட்டபோது, "வரும் செமஸ்டரில் இந்த கட்டண உயர்வு கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.

    • திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
    • இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.470-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 54 சுங்கச்சாவடிகளுடன் புதிதாக சில சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இவற்றில், குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந் தேதியும் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

    நடப்பாண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந் தேதி (இன்று நள்ளிரவு) முதல் அமல்படுத்தப்படுகிறது.

    அதன்படி, திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

    குறிப்பாக, மதுரை-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்றுவர பழைய கட்டணம் ரூ.85-ல் இருந்து ரூ.90 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.125-ல் இருந்து ரூ.135 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2 ஆயிரத்து 505-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 740 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.145-ல் இருந்து ரூ.160 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.220-ல் இருந்து ரூ.240 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.4 ஆயிரத்து 385-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதேபோல் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர கட்டணம் ரூ.290-ல் இருந்து ரூ.320 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.440-ல் இருந்து ரூ.480 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூ.8 ஆயிரத்து 770-ல் இருந்து ரூ.9 ஆயிரத்து 595 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதேபோல் இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.470-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருமுறை சென்றுவர கட்டணம் ரூ.705-ல் இருந்து ரூ.770 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூ.14 ஆயிரத்து 95-ல் இருந்து ரூ.15 ஆயிரத்து 420 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதேபோன்று பிற சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் தூரத்துக்கு தகுந்தவாறு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பேரிஜம் செல்லும் நுழைவாயில் கட்டணத்தை வனத்துறை உயர்த்தியுள்ளது
    • வாடகை வாகன கட்டணத்தை தாங்கள் மீண்டும் உயர்த்தும் நிலையில் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்லும் பயணத்தை ரத்து செய்து விடுவார்கள்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் ஒரு சுற்றுலா தலமாகும். இங்கு வனத்துறை, தோட்டக்கலை துறை, நகராட்சி மற்றும் தனியார் இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அதிகமாக உள்ளன. இதில் கட்டணம் மற்றும் கட்டணமில்லாத சுற்றுலா தலங்களும் உள்ளன. குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் அதிகமாக சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்து செல்கி ன்றனர். வனத்துறையினர் அவ்வப்போது கட்டணங்களை உயர்த்துவது நடைமுறையாக உள்ளது.

    ஒரு சில நேரங்களில் எதிர்ப்புகள் எழும் நிலையில் சிறிதளவு கட்டணத்தை கண் துடைப்பிற்காக குறைப்பதும் வாடிக்கையாக உள்ளது. உள்ளூர் வாடகை வாகன ஓட்டுநர்கள், வாடகை வாகன உரிமையாளர்கள் ஆகியோர்களை அழைத்து கட்டணங்களை உயர்த்தும் போது எப்போதாவது வனத்துறையினர் ஆலோசனை நடத்துவது வழக்கம். ஆனால் தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பேரிஜம் செல்லும் நுழைவாயில் கட்டணத்தை வனத்துறை உயர்த்தியுள்ளது.இதனால் பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் வெளியூரிலிருந்து வரும் வாடகைக்கு வாகன ஓட்டுநர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே பெட்ரோல் டீசல் உயர்த்தியதால் தங்களது வாடகை கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும், இதே போல் வனத்துறை சுற்றுலா தலங்களிலும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் தாங்களும் வாடகை கட்டணத்தை உயர்த்திக் கொண்டே போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் மீண்டும் பேரிஜம் செல்லும் நுழைவாயில் கட்டணத்தை உயர்த்தி உள்ளதால் வாடகை வாகன கட்டணத்தை தாங்கள் மீண்டும் உயர்த்தும் நிலையில் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்லும் பயணத்தை ரத்து செய்து விடுவார்கள்.

    தங்களுக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்படும் என்றும் வனத்துறையினர் அடிக்கடி கட்டணங்களை உயர்த்துவதால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தற்போது கார்களுக்கு 300 ரூபாயாகவும், வேன்களுக்கு 600 ரூபாயாகவும் உயர்த்தி உள்ளதை மறு பரிசீலனை செய்து முன்பு போல கார்களுக்கு 200, வேன்களுக்கு 300 ரூபாய் என நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தங்களின் வேண்டுகோளாக உள்ளதாக வாடகை வாகன ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

    • கூடுதல் கட்டணம் சேவை வரி மற்றும் வினியோக வரி என்ற வகையில் வசூலிக்கப்படுகிறது.
    • அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து உணவு வினியோக நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    இன்றைய அவசரமான உலகில் கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். இதனால் வேலை முடிந்து வரும் அவர்கள் வீடுகளில் சமைப்பதற்கு பதில் அதனை ஓட்டல்களில் இருந்து வாங்கி வந்து சாப்பிட்டனர்.

    இப்போது ஓட்டல்களுக்கு செல்வதற்கு பதில் அதனை வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து வாங்கும் வசதி வந்துவிட்டது. இதற்காகவே தொடங்கப்பட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் உணவு ஆர்டர் செய்வதற்காக தனி செயலிகளை தொடங்கி அதன்மூலம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று உணவு பொருள்களை சப்ளை செய்து வருகிறார்கள்.

    இந்த செயலிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெரு நகரங்களில் இதுபோன்ற உணவு பொருள் வினியோகிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு வீடுகளுக்கே சென்று உணவு வினியோகிக்கும் நிறுவனங்கள் உணவு பொருளின் விலையுடன் சேவைக்கட்டணம் மற்றும் வினியோக கட்டணம் ஆகியவற்றையும் சேர்த்து வாங்கி கொள்ளும். அதாவது சென்னையில் ஒரு சிக்கன் பிரியாணியின் விலை ரூ.150 என்றால், அதனை உணவு வினியோக நிறுவனம் மூலம் வாங்கினால் அதற்கு வாடிக்கையாளர் ரூ. 200 செலுத்த வேண்டும்.

    இந்த கூடுதல் கட்டணம் சேவை வரி மற்றும் வினியோக வரி என்ற வகையில் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த கூடுதல் கட்டணத்தை உணவு வினியோக நிறுவனத்தினர் தனித்தனியாக பிரித்து காட்டுவதில்லை. மொத்தமாக பில்லில் குறிப்பிட்டு இருப்பார்கள். இதனால் வாடிக்கையாளரிடம் இருந்து எவ்வளவு பணம் கூடுதலாக வாங்கப்படுகிறது என்பது வாடிக்கையாளருக்கு தெரியாது.

    இந்நிலையில் உணவு வினியோக நிறுவனங்கள் இப்போது டெலிவரி கட்டணத்தை ரூ.2 உயர்த்த உள்ளனர். இதுபோல உணவு வினியோக நிறுவனத்தின் உறுப்பினர் கட்டணத்தையும் அதிகரிக்க உள்ளனர். இக்கட்டணங்கள் அதிகரிக்கும் போது இப்போது வாங்கும் விலையை விட உணவு பொருள்களின் விலை 25 சதவீதம் வரை அதிகரிக்கும்.

    அதாவது உணவு வினியோக நிறுவனங்கள் மூலம் வாங்கும் பொருள்களுக்கு தான் இந்த விலை உயர்வு. இதனையே நாம் ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டால் இந்த விலை உயர்வு இருக்காது.

    இதுபோல உணவு வினியோகிக்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை உறுப்பினர்களாகவும் சேர்த்துள்ளனர். இதற்காக மாதத்திற்கு ஒரு கட்டணமும் வசூலிக்கிறார்கள். உறுப்பினர்களாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கு உணவு வாங்கினால் சலுகை வழங்குவதாக கூறியிருப்பார்கள்.

    அந்த சலுகையை பெற வாடிக்கையாளர் தனது தேவைக்கு அதிகமான உணவை ஆர்டர் செய்ய வே ண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

    இவ்வாறு உணவு வினியோகிக்கும் நிறுவனங்கள் கட்டண உயர்வு மூலம் கூடுதல் பணம் வசூலிப்பதாகவும், இதனை வாடிக்கையாளர்களுக்கு உரிய முறையில் தெரிவிப்பதில்லை என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. எனவே அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து உணவு வினியோக நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இந்த நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களுக்கான விலையை முறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    • தொடர் விடுமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
    • ஓட்டல்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ஊட்டி,

    தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    சமவெளியில் வெயில் நிலவி வரும் அதே வேளை யில், நீலகிரி மாவட்டத்தில் குளுமையான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.இதையடுத்து நீலகிரியில் நிலவி வரும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.கடந்த 2 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே அறை எடுத்து இங்கு தங்குவது வழக்கம்.

    இதற்காக அவர்கள் சுற்றுலாவுக்கு ஊரில் இருந்து புறப்படும் முன்பே இணையதளத்தில் சென்று விடுதியை புக் செய்வது வழக்கம்.

    தற்போது கோடை சீசன் தொடங்கி நடந்து வருகிறது. சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பலர் தங்களது குடும்பத்தி னருடன் ஊட்டிக்கு சுற்றுலா வருகின்றனர்.

    இந்த நிலையில் தங்கும் விடுதிகளில் வாடகை கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து உள்ளது. கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை களில் விடுதி கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மிக அதிகமாகும். இதனால் ஊட்டிக்கு வரக்கூடிய நடுத்தர மற்றும் ஏழை சுற்றுலா பயணிகள் மி கவும் பாதிப்படைந்து ள்ளனர். விடுதி கட்டணம் மட்டு மின்றி, லாட்ஜ் அறைகள், உணவு பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். காசு அதிகம் கொடுத்து உணவு வாங்கி சாப்பிட்டாலும், அந்த உணவு தரமாக இருக்க வேண்டும் என அனை வரும் எதிர்பார்ப்பது தான். ஆனால் அங்குள்ள பல ஓட்டல்களில் காசை அதிகமாக வாங்கி கொண்டு தரமற்ற உணவுகளை விற்பதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    சமீபத்தில் கூட ஊட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் கெட்டுபோன உணவு பரிமாறப்பட்டதாக பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணி வீடியோவை பகிர்ந்திருந்தது நினைவுகூரத்தக்கது.

    2 நாள்கள் ஊட்டிக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு, நிம்மதியாக தங்கி செல்லலாம் என வரும் சுற்றுலா பயணிகளுக்கு விடுதி கட்டணம் உயர்வு, தரமற்ற உணவு போன்றவை அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

    • தூய்மை பணியாளர் சம்பளம் உயர்த்தி வழங்கிட தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
    • கோவை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

     கோவை,

    கோவை மாநகராட்சி கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் இன்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தின் முதல் நிகழ்வாக மேயரால் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் படி ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வருகிற ஜனவரி 1 -ந் தேதி முதல் ரூ.648 என சம்பளத் தொகையை உயர்த்தி வழங்கிட சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை அனைத்து 100 வார்டு கவுன்சிலர்களும் ஏற்றதையடுத்து மேயரால் இந்த தீர்மானம் அனுமதிக்கப்பட்டது.

    அதன் பின்னர் கூட்டத்தில் வ.உ.சி. சிறுவர் பூங்காவிற்கு கட்டணம் சிறுவர்களுக்கு ரூ. 5 எனவும், பெரியவர்களுக்கு ரூ.10 என உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வ.உ.சிதம்பரனாருக்கு முழு உருவச் சிலையினை வ.உ.சி. பூங்காவில் பொதுப்பணிதுறை மூலம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்தல், தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தின் கீழ் சேதமடைந்த தார் சாலைகளை சீரமைக்க ரூ.26 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து மூன்றாம் நபர் ஆய்வு மேற்கொள்ள ரூ.35 லட்சத்து 51 ஆயிரத்து 800 ஆகும், இதற்கான அனுமதி கோருதல்,

    மாநகராட்சி பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு குடிநீர் இணைப்பு கட்டணமின்றி வழங்குதல், தெரு நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ள தெரு நாய் ஒன்றுக்கு ரூ.445 யில் இருந்து ரூ.700 என்ற வீதத்தில் முதல்கட்டமாக ஒரு மண்டலத்திற்கு 1000 தெரு நாய்கள் வீதம், 5 மண்டலங்களுக்கு 5000 தெருநாய்களை பிடிக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட 65 தீர்மானங்களுக்கு அனுமதி கோரப்பட்டது. இந்த தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

    கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் பேசுகையில், " மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் பூமி பூஜை போடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் 75 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. மீதம் உள்ள பணிகள் நிறைவு பெறாமல் அரைகுறையாக உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்," என்றார்.

    மத்திய மண்டல தலைவர் மீனா லோகு பேசுகையில், தெரு நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளும் பணி நடக்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் இப்பணியை மேற்கொள்கிறது. அன்மையில் பெண் நாய் ஒன்றுக்கு கருத்தடை செய்யப்பட்டது ஆனால் 6 மாதம் கழித்து அந்த நாய் மீண்டும் கர்ப்பம் ஆனது," என்றார். இதனால் மன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

    முன்னதாக அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் கூட்டரங்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி கவுன்சிலர் பிரபாகரன் நிருபர்களிடம் கூறுகையில் கோவை மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களுக்குள் யார் அதிகமாக சம்பாதிப்பது என்ற போட்டி நிலவுகிறது. மக்களை பற்றிய அக்கறை தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இல்லை. மேலும் மேயரை கண்டித்தும் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார்.

    ×